Get the most accurate TN Board Solutions for Class 10 Tamil Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள் here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 10 Tamil. Our expert-created answers for Class 10 Tamil are available for free download in PDF format.
Detailed Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள் TN Board Solutions for Class 10 Tamil
For Class 10 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 10 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள் solutions will improve your exam performance.
Class 10 Tamil Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள் TN Board Solutions PDF
கற்பவை கற்றபின்
Question. இன்று நங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக.
பத்தி செய்தி :
கதிரவன் வந்தான். கதிரவா வா என அழைத்தாள் சீதா. சீதையைக் கண்டேன் எனக் கூறிய கதிரவன், அம்மா நலமா? எனக் கேட்டான். அம்மா நனி நலம்; நேற்றுதான் வந்து போனாள்; உன்னை விசாரித்தாள் எனச் சீதா கூறினாள். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சீதாவின் கழுத்தில் கத்தியை வைத்தான் கதிரவன். உன் சங்கிலியைத் தா என்றான். அவள், அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே ஓடிப்போனாள் திருடன், திருடன் என அவள் கூச்சலிட்டதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர்; கதிரவனைப் பிடித்தனர். பின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர் காவலர் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம்பிக்கை துரோகி ஒருவனிடமிருந்து தான் காப்பாற்றப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறினாள்.
Answer:
கதிரவன் வந்தான், அம்மா நலமா?, சீதா கூறினாள், அனைவரும் திரண்டனரா? – எழுவாய்த் தொடர்கள்
கதிரவா வா - விளித்தொடர்
திருடன் திருடன் – அடுக்குத்தொடர் (அச்சம் காரணமாக)
அழைத்தாள் சீதா - வினைமுற்றுத் தொடர்
நனிநலம் - உரிச்சொல் தொடர்
கூறிய கதிரவன், கேட்ட ஊர் மக்கள் - பெயரெச்சத் தொடர்கள்
வந்து போனாள் - வினையெச்சத் தொடர்
சீதையைக் கண்டேன், உன்னை விசாரித்தாள், கத்தியை வைத்தான், கதிரவனைப் பிடித்தனர், சங்கிலியைத் தா - இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள்
கழுத்தில் கத்தி, சிறையில் அடைத்தனர் - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள்
காவல் நிலையத்திற்குத் தகவல், இறைவனுக்கு நன்றி – நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள்
In simple words: கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் இருந்து, எழுவாய், விளி, அடுக்கு, வினைமுற்று, உரிச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், இரண்டாம், ஐந்தாம் மற்றும் நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்களைப் பிரித்தெடுத்து எழுதியுள்ளோம். இது தமிழ் இலக்கணத்தின்படி சொற்றொடர்களை வகைப்படுத்தும் ஒரு பயிற்சி.
🎯 Exam Tip: ஒரு பத்தியில் இருந்து தொகாநிலைத் தொடர்களைப் பிரிக்கும்போது, ஒவ்வொரு தொடரின் இலக்கண வகையையும் சரியாக அடையாளம் காண்பது முக்கியம். இது சொற்றொடர் அமைப்பு பற்றிய புரிதலை மேம்படுத்தும்.
Question 2. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
Answer:
• இறங்கினார் முகமது - வினைமுற்றுத் தொடர்
• அவர் பாடகர் - எழுவாய்த் தொடர்
• பாடுவது கேட்பது - கூட்டு வினையெச்சத் தொடர்
• கேட்ட பாடல்கள் – பெயரெச்சத் தொடர்
• கேட்காத பாடல்கள் - எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
• அடுக்கு அடுக்காக - அடுக்குத் தொடர்
In simple words: மேலே உள்ள பத்தியில் இருந்து, ஒவ்வொரு வாக்கியமும் எந்த வகைத் தொடர் என்று பிரித்து எழுதி உள்ளோம். உதாரணமாக, ஒரு செயலைக் குறிக்கும் வாக்கியம் வினைமுற்றுத் தொடர்.
🎯 Exam Tip: தொடர் வகைகளை அடையாளம் காண, முதலில் ஒரு வாக்கியத்தின் முக்கியச் சொற்களையும், அவை பிற சொற்களுடன் எவ்வாறு இணைகின்றன என்பதையும் கவனியுங்கள். இது சரியான வகையைப் பிரித்தறிய உதவும்.
Question 3. வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.
Answer:
• பழகப் பழகப் பாலும் புளிக்கும் - அடுக்குத்தொடர்
• வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் - பெயரெச்சத் தொடர்
• மேடையில் நன்றாகப் பேசினான். - வினையெச்சத் தொடர்
• வந்தார் அண்ணன் - வினைமுற்றுத் தொடர்
• அரியசெகுப்பு இது. - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
In simple words: கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எந்த வகை இலக்கணத் தொடர் என்பதைப் பிரித்து எழுதி உள்ளோம். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொடர் வகை உள்ளது.
🎯 Exam Tip: தொடர் வகைகளைக் கண்டறிய, ஒவ்வொரு வாக்கியத்திலும் உள்ள வினைமுற்று, எச்சம், வேற்றுமை உருபு போன்ற இலக்கணக் கூறுகளைப் புரிந்து கொள்வது அவசியம். இது சரியான வகைப்பாட்டிற்கு உதவும்.
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்க்க.
Respected ladies and gentleman, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil Culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should proud about our culture. Thank you one and all.
Answer:
மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழரே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!
In simple words: மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பத்தியை தமிழில் மொழிபெயர்த்துள்ளோம். இளங்கோவன் என்ற பத்தாம் வகுப்பு மாணவர், தமிழ் கலாச்சாரம், அதன் பழமை, சங்க இலக்கியத்தின் பங்கு, மற்றும் அதன் உலகளாவிய பரவல் பற்றிப் பேசுகிறார். நம் கலாச்சாரத்தைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறார்.
🎯 Exam Tip: மொழிபெயர்க்கும்போது, மூல மொழியின் கருத்தையும் உணர்வையும் அப்படியே கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். சொற்களுக்குப் பொருள் தேடுவதோடு, வாக்கிய அமைப்பும் இயல்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
பழமொழிகளை நிறைவு செய்க.
• உப்பில்லாப்
• ஒரு பானைச்
• உப்பிட்டவரை
• விருந்தும்
• அளவுக்கு
Answer:
• உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
• ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்.
• உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
• விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.
• அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
In simple words: கொடுக்கப்பட்ட பழமொழிகளின் முதல் பகுதியைக் கொண்டு, மீதமுள்ள பகுதியை நிறைவு செய்து முழுமையான பழமொழிகளை எழுதியுள்ளோம். பழமொழிகள் நம் வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல கருத்துகளைக் கூறுகின்றன.
🎯 Exam Tip: பழமொழிகளை நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றின் பொருளைப் புரிந்து கொண்டு, அன்றாட வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எளிது. பழமொழிகள் சமுதாயத்தின் அனுபவத்தைக் கூறும் சிறு வாக்கியங்கள்.
பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுது.
பழையசோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் கடுப்பு மணத்தை சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழையச் சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நார்த்தங்காய் அதனுடன் சேர்த்துக் கொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழம் வாசம் வீசுமாம். பழைய சோறு அது கிராமத்து உன்னதம். "கைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து - முக்கூடற்பள்ளு
Answer:
நெல்லை அவித்து காயவைத்து எடுக்கும் புழுங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊறவைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நாரத்தங்காய் மற்றும் சுண்ட வைத்த குழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம். இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
In simple words: இந்தப் பத்தி பழைய சோற்றின் அருமையைப் பற்றிப் பேசுகிறது. புதிதாக சமைத்த சோற்றை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், குழம்பு போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவது கிராமத்து மக்களின் விருப்பமான மற்றும் ஆரோக்கியமான உணவாகும் என்று சொல்கிறது.
🎯 Exam Tip: ஒரு பத்தியைச் சுருக்கும்போது, முக்கியக் கருத்துகளை மட்டும் எடுத்து, சொந்த நடையில் சுருக்கமாக எழுத வேண்டும். பத்தியின் மையக் கருத்தை மாற்றாமல் சுருக்கம் அமைய வேண்டும்.
கதையாக்குக.
மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்; புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருளைத் திரட்டி, கற்பனை நயம் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக....... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
Answer:
அந்திமாலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது பாலத்தின் கீழிருந்து சத்தம் கேட்டு பாலத்தின் அடியில் எட்டிப் பார்த்தேன். பசிமயக்கத்தால் சுருண்டு கிடந்தாள் ஒரு பெண். குளிர் தாங்க முடியாமல் சத்தம். அரைகுறை ஆடையில் இருந்தாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எனக் கண்டுபிடித்தேன். உடனே, வீட்டிற்கு வந்து உணவை ஒரு பாத்திரத்திலும், ஆடை மற்றும் ஒரு போர்வையை ஒரு பையிலும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன். அவ்வுணவை எடுத்து சாப்பிடுவதற்குக்கூட அவளிடம் பலமில்லை. பாதி சாப்பிட்டு விட்டு உட்கார முடியாமல் அவ்வுணவின் மீதே சரிந்து விழுந்தாள். உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவம் பார்த்து, அவளை மருத்துவரின் உதவியுடன் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தேன். அவள் மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. உதவி செய்வது ஒரு நல்ல செயல்.
In simple words: ஒரு நடைபயிற்சியின் போது, பாலம் அடியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு உணவு, உடை, போர்வை கொடுத்து உதவியதுடன், மருத்துவர் உதவியுடன் அவளை மனநலக் காப்பகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். எனது உதவியால் அவள் மகிழ்ச்சி அடைந்தாள்.
🎯 Exam Tip: ஒரு கதையை உருவாக்கும்போது, ஒரு தெளிவான தொடக்கம், நடுப்பகுதி மற்றும் முடிவைக் கொண்டிருங்கள். கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்துங்கள், இது கதையை வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக்கும்.
கடிதம் எழுதுக.
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கண்ணன்,
25 வள்ளல் தெரு,
அண்ணாநகர்,
திருநெல்வேலி – 11.
23.03.2020.
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
திருநெல்வேலி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல் – தொடர்பாக.
வணக்கம்.
இன்று காலை பேருந்துநிலையத்திற்கு வெளியில் உள்ள "சுவையகம்" என்ற உணவகத்திற்குச் சென்றோம். நானும் என் நண்பனும் உணவு உண்டோம். உணவில் கல்லும், குழம்பில் பூச்சியும் கிடந்தது. உணவக மேலாளரிடம் முறையிட்டோம். அதற்குச் சரியான காரணத்தை அவர் அளிக்கவில்லை. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு விலைப்பட்டியல் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த தொகையை வாங்காமல் கூடுதலாக இருபது ரூபாய்க் காசாளர் வாங்கினார்.
எனவே, தரமற்ற உணவையும், விலை கூடுதலாகவும் விற்பனை செய்த, அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கான தக்க சான்றுகள் (புகைப்படம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி!
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
கண்ணன்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
திருநெல்வேலி.
In simple words: ஒரு உணவகத்தில் உணவு தரமற்றதாகவும், விலை அதிகமாகவும் இருந்ததால், அதைப் பற்றி உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம். இது போன்ற தவறுகளைத் திருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் கடிதம் இது.
🎯 Exam Tip: ஒரு கடிதம் எழுதும் போது, அனுப்புநர், பெறுநர், தேதி, பொருள், வாழ்த்து, முக்கிய செய்திகள் மற்றும் நன்றி தெரிவித்து முடிக்க வேண்டும். மொழி தெளிவாகவும், மரியாதையாகவும் இருக்க வேண்டும்.
நயம் பாராட்டுக.
"கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்த
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்". - காளமேகப் புலவர்
திரண்ட கருத்து :
வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து
Answer:
கடல் சூழ்ந்த ஊர் நாகப்பட்டினம். அங்குள்ள காத்தான் சத்திரத்தில் பொழுது இறங்கும் போதுதான் அரிசி வரும். அதனைத் தீட்டி உலையிலிட்டால், பசி அடங்கிப் போயிருக்கும் ஓர் அகப்பை அன்னம் இலையில் போடும்போது விடிவெள்ளி முளைத்துவிடும்.
தொடை நயம் :
தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்
செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.
மோனை நயம் :
மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.
சான்று:
கத்துகடல், காத்தான்
உலையிலிட, ஊரடங்கும்
அத்தமிக்கும், அரிசி வரும்
எதுகை நயம்:
வீரத்துக்கு அழகு வேங்கை
பாட்டுக்கு அழகு எதுகை
அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
சீர் எதுகை:
கத்துகடல், காத்தான், சத்திரத்தில்; அத்தமிக்கும், குத்தி
அடி எதுகை:
கத்துகடல் - உலையிலிட
அத்தமிக்கும் - இலையிலிட
அணி நயம் :
கோவிலுக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு
இப்பாடல் இரு பொருள்பட வந்து இரட்டுற மொழிதல் அணியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
பா நயம் :
இப்பாடல் நேரிசை வெண்பா வகையைச் சார்ந்தது.
தலைப்பு:
'நாகை சத்திரம்' என்பது இப்பாடலுக்குப் பொருத்தமான தலைப்பு.
In simple words: இந்தப் பாடல் நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தைப் பற்றியது. அங்குப் பொழுது சாய்ந்த பிறகுதான் அரிசி கிடைக்கும். அந்த அரிசியைச் சமைத்து இலையில் இடும்போது, மக்களுக்குப் பசி தீர்ந்து விடிந்ததைப் போன்ற மகிழ்ச்சி ஏற்படும். இதில் மோனை, எதுகை போன்ற சொற்சுவை மற்றும் இரட்டுற மொழிதல் அணி போன்ற பொருள் நயங்களும் உள்ளன.
🎯 Exam Tip: நயம் பாராட்டும்போது, கவிதை சொல்லும் கருத்தைப் புரிந்து கொண்டு, மோனை, எதுகை, அணி நயங்கள் போன்ற இலக்கியக் கூறுகளைத் தெளிவுபடுத்துங்கள். ஒவ்வொரு நயத்தையும் உதாரணங்களுடன் விளக்குவது நல்ல மதிப்பெண்கள் பெற உதவும்.
மொழியோடு விளையாடு
Question. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடி.
இ - கு (பறவையிடம் இருப்பது)
கு - தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வா - (மன்னரிடம் இருப்பது)
அ - கா (தங்கைக்கு மூத்தவள்)
ம - (அறிவின் மறு பெயர்)
பட - (நீரில் செல்வது படகு)
Answer:
இறகு (பறவையிடம் இருப்பது)
குருதி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வாள் (மன்னரிடம் இருப்பது)
அக்கா (தங்கைக்கு மூத்தவள்)
மதி (அறிவின் மறு பெயர்)
படகு (நீரில் செல்வது படகு)
திருக்குறள்
In simple words: கொடுக்கப்பட்ட குறிப்புகளின் படி விடுபட்ட எழுத்துகளை நிரப்பி, அந்த எழுத்துகளை மட்டும் இணைத்தால் "திருக்குறள்" என்ற நூலின் பெயர் கிடைக்கிறது.
🎯 Exam Tip: இது போன்ற புதிர் கேள்விகளைத் தீர்க்க, ஒவ்வொரு குறிப்பையும் கவனமாகப் படித்து, சரியான சொல்லைக் கண்டறிந்து, பின்னர் விடுபட்ட எழுத்துகளை மட்டும் இணைத்துப் பாருங்கள். இது மறைந்திருக்கும் பதிலைக் கண்டுபிடிக்க உதவும்.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
எ.கா. சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.
Answer:
• சிலை- சீலை : எ.கா: சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருந்தனர்.
• தொடு - தோடு : காதைத் தொடும்போது தோடு அழகாக ஆடியது.
• மடு - மாடு : மடுவில் (குட்டையில்) மாடு நீர்க் குடித்தது.
• மலை - மாலை : மலை மீது ஏறி மாலையில் விளையாடினேன்.
• வளி - வாளி : வளியும் (காற்றும்) வாளியும் (அன்பும்) இல்லாமல் வாழ முடியாது.
• விடு - வீடு : அகந்தையை விடு, வீடுபேறு (சொர்க்கம்) கிடைக்கும்.
In simple words: கொடுக்கப்பட்ட ஒவ்வொரு இணைச் சொற்களையும் பயன்படுத்தி, ஒரு பொருள் தரும் ஒரே வாக்கியத்தை உருவாக்கியுள்ளோம். இந்தச் சொற்கள் ஒன்றாக வரும்போது வெவ்வேறு பொருள்களைக் கொடுக்கும்.
🎯 Exam Tip: ஒரு வாக்கியத்தில் இரு வேறு சொற்களைப் பயன்படுத்தும்போது, அவை இலக்கணப்படி சரியாக அமைய வேண்டும். சொற்களின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு வாக்கியம் அமைப்பது எளிது.
அகராதியில் கண்டு பொருள் எழுதுக.
அ) ஊண், ஊன்
ஆ) திணை, தினை
இ) அண்ணம், அன்னம்
ஈ) வெல்லம், வெள்ளம்
Answer:
அ) ஊண், ஊன்
ஊண் – இரை, உண்டி, சோறு, உணவு, ஆன்மாவின் சுகதுக்கனுபவம்.
ஊன் – உடல், தசை, நிணம், மாமிசம், சரீரம்.
ஆ) திணை, தினை
திணை - இடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள்.
தினை - ஒரு சாமை (தானியம்), சிறுமை.
இ) அண்ணம், அன்னம்
அண்ணம் - மேல்வாய், மேல் நாக்கு.
அன்னம் - கவரிமான், சோறு தானியம், பிரம்ம வாகனம்.
ஈ) வெல்லம், வெள்ளம்
வெல்லம் – கருப்பஞ்சாற்றுக்கட்டி.
வெள்ளம் – நீர்ப்பெருக்கு, கடல், கடலலை, நீர், ஈரம், மிகுதி, உண்மை.
In simple words: கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சொல் இணைக்கும் அகராதியில் உள்ள அர்த்தங்களை எழுதியுள்ளோம். ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்களுக்கு வெவ்வேறு பொருள்கள் இருப்பதை இது காட்டுகிறது.
🎯 Exam Tip: அகராதிப் பொருள்களை எழுதும் போது, ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள அனைத்து அர்த்தங்களையும் புரிந்துகொள்வது அவசியம். சில சொற்களுக்கு பல பொருள்கள் இருக்கலாம்.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Free study material for Tamil
TN Board Solutions Class 10 Tamil Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள்
Students can now access the TN Board Solutions for Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள் prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 10 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.
Detailed Explanations for Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள்
Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 10 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 10 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.
Benefits of using Tamil Class 10 Solved Papers
Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 10 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 03.5 தொகாநிலைத் தொடர்கள் to get a complete preparation experience.
FAQs
The complete and updated Samacheer Kalvi Class 10 Tamil Solutions Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் is available for free on StudiesToday.com. These solutions for Class 10 Tamil are as per latest TN Board curriculum.
Yes, our experts have revised the Samacheer Kalvi Class 10 Tamil Solutions Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.
Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 10 Tamil Solutions Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் will help students to get full marks in the theory paper.
Yes, we provide bilingual support for Class 10 Tamil. You can access Samacheer Kalvi Class 10 Tamil Solutions Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் in both English and Hindi medium.
Yes, you can download the entire Samacheer Kalvi Class 10 Tamil Solutions Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் in printable PDF format for offline study on any device.