Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Get the most accurate TN Board Solutions for Class 12 Tamil Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு here. Updated for the 2026-27 academic session, these solutions are based on the latest TN Board textbooks for Class 12 Tamil. Our expert-created answers for Class 12 Tamil are available for free download in PDF format.

Detailed Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு TN Board Solutions for Class 12 Tamil

For Class 12 students, solving TN Board textbook questions is the most effective way to build a strong conceptual foundation. Our Class 12 Tamil solutions follow a detailed, step-by-step approach to ensure you understand the logic behind every answer. Practicing these Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு solutions will improve your exam performance.

Class 12 Tamil Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு TN Board Solutions PDF

 

Question 1. பாரதியின் வாழ்வினைக் காலக்கோடாக உருவாக்குக.
Answer: பாரதியார் வாழ்ந்த காலக்கோட்டினைப் பின்வருமாறு தொகுக்கலாம்:
1880: பாரதியார் பிறந்த ஆண்டு.
1893: பாரதி பட்டம் பெற்ற ஆண்டு.
1895: ஐந்தாம் வகுப்பு வரை படித்தது, செல்லம்மாளுடன் திருமணம்.
1900: காசியில் வசித்தது, நிவேதிதா தேவியை ஞான குருவாக ஏற்றது, மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
1906: இந்தியா பத்திரிகையில் பணியாற்றினார்.
1907: அரவிந்தர், திலகருடன் சந்திப்பு, சிறை சென்றார்.
1910: ஜன்ம பூமி நூல் வெளியானது, மீண்டும் அரவிந்தருடன் சந்தித்தார்.
1912: கீதை மொழிபெயர்ப்பு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் இயற்றல், ஞானப்பாலை பத்திரிக்கை வெளியீடு.
1917: கண்ணன் பாட்டு வெளியீடு, சுதேச கீதங்கள் வெளியீடு.
1919: காந்தியைச் சந்தித்தார்.
1920: உதவி ஆசிரியர் வேலை, தாக்குதல், வயிற்று நோய், மறைவு.
இந்தக் காலக்கோடு பாரதியாரின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் அவரது படைப்புப் பயணத்தை மிகத் தெளிவாகக் காட்டுகிறது.
In simple words: பாரதியார் பிறந்த ஆண்டு 1880. அவருக்கு 1893-ல் 'பாரதி' பட்டம் கிடைத்தது. அவர் நிறைய கவிதைகள், நூல்கள் எழுதினார். 1920-ல் அவர் காலமானார்.

🎯 Exam Tip: காலக்கோடு கேள்விகளுக்கு, முக்கிய நிகழ்வுகள் மற்றும் சரியான ஆண்டுகளை வரிசையாக எழுதுவது முழு மதிப்பெண் பெற உதவும்.

 

Question 2. காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக.
Answer:
தூத்துக்குடி,
18 ஜூன் 2019.

முறுக்கிய மீசையும், முறைத்த பார்வையும், முண்டாசுக் கட்டுக்கும் சொந்தக்காரனே, செந்தமிழின் எழுச்சியே வணக்கம்.

உனது பொன் எழுத்துக்களால் தமிழ் அன்னைக்கு வைரக்கிரீடம் சூட்டி மகிழ்ந்தாய். ஆனால், கடைசிவரை சாதாரண தலைப்பாகையினை நீ அணிந்திருந்தாய் என எத்தனைப் பேருக்குத் தெரியும்.

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்று பாடினாயே பாரதி. இன்றைய பாலியல் வன்கொடுமையை முன்னரே சாடினாயே பாரதி.

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைப் பெற்றுவிட்டபோதிலும் "அச்சமில்லை அச்சமில்லை" என்று சுதந்திரத்தின் மேன்மையை மக்களின் மனதில் கொடியேற்றி வைத்தவன் நீ.

தமிழில் ஓர் எழுத்துதான் ஆய்த எழுத்து. ஆனால் மற்ற 246 எழுத்துகளையும் ஆயுதமாக்கி வெள்ளையனை விரட்ட விடுதலைக் கவிதைகள் எழுதினாய்.

என் உள்ளமெனும் பெருங்கோவிலில் நீ வீற்றிருக்கிறாய். என்றொரு நாளாவது உன்னோடு ஒரே மேடையில் கவிபாட நான் விரும்புகின்றேன்.

நீவிர் சம்மதித்தால் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று நாம் இருவரும் "தமிழே! உனக்குத் தலைவணங்குகிறோம்" என்ற தலைப்பில் ஒரு கவிதையை பொதிகை தொலைக்காட்சியில் பாடுவோம். உன் பதிலை உடன் எதிர்பார்க்கும் அன்பு நண்பன்.

இப்படிக்கு,
பாரதிநேசன்.
மகாகவி பாரதிக்கு எழுதிய இந்த கற்பனைக் கடிதம், அவரின் புகழ் மற்றும் சமூகப் பார்வையைப் போற்றுகிறது.
In simple words: மகாகவி பாரதிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் பாரதியின் துணிச்சல், தமிழ் வளர்ச்சி பற்றிய அவரின் எண்ணங்கள், சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு போன்றவை போற்றப்பட்டுள்ளன. இந்தக் கடிதம் அவரின் எழுத்துக்களையும், சமூக அக்கறையையும் நினைவுபடுத்துகிறது.

🎯 Exam Tip: கற்பனைக் கடிதம் எழுதும்போது, கடிதம் யாருக்கு எழுதப்படுகிறது என்பதை மனதில் கொண்டு, அவர்களின் சிறப்புப் பண்புகளைப் பாராட்டி, தெளிவான நடையில் எழுத வேண்டும்.


பாடநூல் வினாக்கள்

 

Question 1. பாரதியின் சமூகப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
Answer: பாரதியாரின் மொழிப்பற்று மற்றும் சமூகப்பற்று ஆகியவை கீழ்க்கண்டவாறு விரிவாகக் கூறலாம்:

மொழிப்பற்று:
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை" என்று பாரதியார் கூறியுள்ளார். சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும், அவர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். நெல்லையப்பரிடம், "நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். புதிய செய்திகளும், உண்மைகளும், இன்பமும் தமிழ்மொழியில் வளர வேண்டும் என்று அவர் விரும்பினார்.

தமிழ்நாட்டில் தெருக்கள்தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் புதிய புதிய கலைகள் கற்றுத் தரப்பட்டு மாணவர்கள் வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் வளர்ந்ததைப் பார்த்து, நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தாய்மொழியின் வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம் என்பதை பாரதியார் உணர்த்தினார்.

சமூகப்பற்று:
சமூகத்தின் அவலமான ஆண், பெண் வேறுபாடு முழுவதுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன், பெண் அடிமை என்ற நிலை சமூகத்திற்கு நல்லதல்ல. அந்நிலை மாற வேண்டும். ஆணும் பெண்ணும் ஒரு உயிரின் இரண்டு தலைகள். அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார்.

பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த, பெண்ணைத் தாழ்த்தினவன் தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகிறார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகிறார்.

சமூகம் வளர்ச்சி அடைய தொழில்கள் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றத்திற்காக சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரக்கணக்கில் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பரிடம் வலியுறுத்தியுள்ளார். பாரதியாரின் சமூகப் பார்வை, சமத்துவத்தையும் வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டது.
In simple words: பாரதியார் தமிழ்மொழியை மிகவும் நேசித்தார். தமிழை வளர்க்க வேண்டும் என்றும், புதிய விஷயங்கள் தமிழில் வர வேண்டும் என்றும் சொன்னார். ஆணும், பெண்ணும் சமம் என்று அவர் உறுதியாக நம்பினார். சமுதாயத்தில் தொழில்கள் பெருக வேண்டும், அறிவியல் தமிழில் வளர வேண்டும் என்றும் விரும்பினார்.

🎯 Exam Tip: மொழிப்பற்று, சமூகப்பற்று போன்ற தலைப்புகளில் பதிலளிக்கும்போது, பாரதியாரின் கூற்றுகளையும், அவரின் கருத்துக்களையும் உதாரணங்களுடன் விளக்குவது அவசியம்.

 

Question 2. "சொல்லோவியங்கள்" (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.
Answer:

சொல்லோவியங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா
இடம்: அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்.
நாள்: 19.06.2019, புதன்கிழமை.
நேரம்: பிற்பகல் 3 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து: மாணவர்கள்
வரவேற்புரை: திரு. ச. செந்தில்குமார் (தலைமையாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்)
நூல் அறிமுக உரை: தி.ப. பிறைசூடன் அவர்கள் (எழுத்தாளர்)
நூல் வெளியீட்டு உரை: திருமிகு. வ. சரவணன் அவர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர், விழுப்புரம்)
முதல் பிரதியைப் பெற்றுக்கொள்பவர்: திருமிகு. தா. அண்ணாமலை அவர்கள் (தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர்)
ஏற்புரை: திரு. கவிஞர். த. தமிழரசன் அவர்கள் (முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்.)
நன்றியுரை: திரு. இரா. கேசவன் (உதவித் தலைமையாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, விழுப்புரம்)
தேசிய கீதம்

நன்றியுரை:
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று" என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம்.

எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவைத் தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசிரியருக்கு நன்றி. இவர் சொல்லோவியங்கள் என்ற கவிதை நூலை அழகுபட செதுக்கியுள்ளார்.

சூர்யா – இளமைத்தமிழே இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எந்தவித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையைத் தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைத்தந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா பிறைசூடனுக்கு நன்றி.

எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் அண்ணாமலை அவர்களின் கரங்களால் முதல் பிரதியைப் பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி. இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி எங்கள் பள்ளிக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை அளிக்கிறது.
In simple words: ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் விழாவின் நிறைவாக, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் உரையும் எழுதப்பட்டுள்ளது. இதில் விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி சொல்லப்பட்டுள்ளது.

🎯 Exam Tip: நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும்போது, நிகழ்வின் வரிசை, விருந்தினர்களின் பெயர்கள், பதவிகள் மற்றும் நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நன்றியுரை எழுதும்போது, வந்திருந்த அனைவரையும் குறிப்பிட்டு, நிகழ்வின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

 

Question 1. தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்
அ) ஆலயம்
ஆ) தொழிற்சாலை
இ) பள்ளிக்கூடம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer: (இ) பள்ளிக்கூடம்
In simple words: பாரதியார், ஒவ்வொரு தெருவிலும் பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

🎯 Exam Tip: பாரதியாரின் சமுதாயக் கருத்துக்கள் பற்றிய கேள்விகளில், அவர் எந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Question 2. பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்
அ) இளசைமணி
ஆ) ரா.அ. பத்மநாபன்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer: (ஆ) ரா.அ. பத்மநாபன்
In simple words: பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களை ரா.அ. பத்மநாபன் என்பவர் தொகுத்து வெளியிட்டார்.

🎯 Exam Tip: நூல் ஆசிரியர் அல்லது பதிப்பாசிரியர் குறித்த கேள்விகளில், பெயர்களைத் தவறின்றி எழுதுவது முக்கியம்.

 

Question 3. கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.
கருத்து 2 : சு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர்.

அ) இரண்டு கருத்தும் தவறு
ஆ) இரண்டு கருத்தும் சரி
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
Answer: (ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
In simple words: பாரதியார் ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னது சரி. ஆனால், பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர் சு. நெல்லையப்பர் இல்லை, ரா.அ. பத்மநாபன்.

🎯 Exam Tip: கூற்று-காரணம் அல்லது கருத்து சார்ந்த கேள்விகளில் ஒவ்வொரு கூற்றையும் தனித்தனியாக ஆராய்ந்து, உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.

 

Question 4. சரியானதைத் தேர்க.
அ) முரசுப்பாட்டு - குந்திகேசவர்
ஆ) நெல்லைத் தென்றல் - வ.உ.சிதம்பரனார்
இ) பாரதி கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன்
ஈ) வம்சமணி தீபிகை - சு. நெல்லையப்பர்
Answer: (இ) பாரதி கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன்
In simple words: 'பாரதி கடிதங்கள்' என்ற நூலை ரா.அ. பத்மநாபன் தொகுத்து வெளியிட்டார்.

🎯 Exam Tip: நூல்களையும் அவற்றின் ஆசிரியர்கள்/பதிப்பாசிரியர்களையும் சரியாகப் பொருத்திப் பார்க்க பயிற்சி செய்யுங்கள்.

 

Question 5. சரியானதைத் தேர்க.
அ) கவிகேசரி சாமி தீட்சிதர் - பாரதி கடிதங்கள்
ஆ) இளசைமணி - சூரியோதயம்
இ) கண்ணன்பாட்டு - ரா.அ. பத்மநாபன்
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு - சு. நெல்லையப்பர்
Answer: (ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு - சு. நெல்லையப்பர்
In simple words: சு. நெல்லையப்பர், வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

🎯 Exam Tip: எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் முக்கிய படைப்புகளை நினைவில் கொள்ளுங்கள்.

 

Question 6. பொருந்தாததைத் தேர்க.
அ) இளசை மணி - வம்சமணி தீபிகை நூலின் மறுமதிப்பு
ஆ) வம்சமணி தீபிகை - கவிகேசரி சாமி தீட்சிதர்
இ) பாரதி வாழ்த்து - பரலி சு. நெல்லையப்பர்
ஈ) உய்யும் வழி - சீனி. விசுவநாதன்
Answer: (இ) பாரதி வாழ்த்து - பரலி சு. நெல்லையப்பர்
In simple words: 'பாரதி வாழ்த்து' என்ற நூலை பரலி சு. நெல்லையப்பர் எழுதியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இது தவறான பொருத்தம். மற்றவை சரியானவை.

🎯 Exam Tip: பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு இணையும் சரிதானா என்று சரிபார்க்கவும்.

 

Question 7. பொருத்துக.
அ) வம்சமணி தீபிகை - 1. சு. நெல்லையப்பர்
ஆ) பாரதி கடிதங்கள் - 2. ரா.அ. பத்மநாபன்
இ) நெல்லைத் தென்றல் - 3. கவிகேசரி சாமி தீட்சிதர்
அ) 1, 2, 3
ஆ) 3, 2, 1
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer: (ஆ) 3, 2, 1
In simple words: வம்சமணி தீபிகை - கவிகேசரி சாமி தீட்சிதர், பாரதி கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன், நெல்லைத் தென்றல் - சு. நெல்லையப்பர். இந்த வரிசைப்படி பார்த்தால், (ஆ) 3, 2, 1 என்பது சரியான விடை.

🎯 Exam Tip: பொருத்தமான இணைகளைக் கண்டறிய, ஒவ்வொரு நூல் மற்றும் ஆசிரியர்/பதிப்பாசிரியர் பற்றிய தகவல்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

Question 8. பொருத்துக.
அ) தமிழ் அழகியல் - 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2. தி.சு. நடராசன்
இ) கிடை – 3. சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி - 4. கி. ராஜநாராயணன்
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer: (இ) 2, 4, 1, 3
In simple words: சரியான பொருத்தங்கள்: தமிழ் அழகியல்- தி.சு.நடராசன், நிலவுப்பூ - கி.ராஜநாராயணன், கிடை - பரலி சு.நெல்லையப்பர், உய்யும் வழி - சிற்பி. பாலசுப்பிரமணியம். இதன்படி, (இ) 2, 4, 1, 3 என்பது சரியான விடை.

🎯 Exam Tip: பொருத்துக கேள்விகளில், ஒரு இணையை சரியாகக் கண்டறிந்தால் கூட, மற்ற இணைகளை சரிபார்க்க உதவும்.

 

Question 9. பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915
ஆ) நெல்லை, 14 ஜூலை 1914
இ) கடலூர், 18 ஆகஸ்ட் 1914
ஈ) காரைக்கால், 19 ஜூலை 1915
Answer: (அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915
In simple words: பாரதியார் புதுச்சேரியில் இருந்து 1915 ஜூலை 19 அன்று நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதினார்.

🎯 Exam Tip: முக்கிய நிகழ்வுகளின் இடம் மற்றும் தேதியை சரியாக நினைவில் கொள்ளுங்கள்.

 

Question 10. நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி?
அ) சிவன்
ஆ) முருகன்
இ) பராசக்தி
ஈ) துர்க்கை
Answer: (இ) பராசக்தி
In simple words: பாரதியார், நெல்லையப்பரை பராசக்தி காக்க வேண்டும் என்று கூறினார்.

🎯 Exam Tip: பாரதியாரின் பக்தி இலக்கியக் கருத்துக்களைப் புரிந்துகொண்டு பதிலளிக்கவும்.

 

Question 11. நெல்லையப்பர் எதனைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறினார்?
அ) பெற்றோரைக் காப்பதை
ஆ) விடுதலைக்குப் போராடுவதை
இ) தமிழ் வளர்ப்பதை
ஈ) சமூக இழிவை களைவதை
Answer: (இ) தமிழ் வளர்ப்பதை
In simple words: பாரதியார், நெல்லையப்பர் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

🎯 Exam Tip: பாரதியாரின் மொழிப்பற்று தொடர்பான கருத்துக்களை சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.

 

Question 12. 'தம்பி-உள்ளமே உலகம்' என்று யார் யாருக்குக் கூறியது?
அ) அறிஞர் அண்ணா, கலைஞருக்கு
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு
இ) மு.வ., இளைஞர்களுக்கு
ஈ) திரு.வி.க., தமிழர்களுக்கு
Answer: (ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு
In simple words: பாரதியார், "தம்பி-உள்ளமே உலகம்" என்று நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதும்போது குறிப்பிட்டார்.

🎯 Exam Tip: முக்கிய மேற்கோள்கள் யார் யாரால் கூறப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Question 13. உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ-என்பதில் 'உனக்கு' என்பது யாரை எதைக் குறிக்கிறது?
அ) தமிழை
ஆ) நெல்லையப்பரை
இ) குயிலை
ஈ) இளைஞர்களை
Answer: (ஆ) நெல்லையப்பரை
In simple words: இந்த வரிகளில் 'உனக்கு' என்பது நெல்லையப்பரைத்தான் குறிக்கிறது.

🎯 Exam Tip: மேற்கோள்களில் உள்ள சுட்டுச்சொற்கள் யாரையோ அல்லது எதையோ குறிக்கும். அதை சரியாக அடையாளம் காண வேண்டும்.

 

Question 14. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது-என்று கடிதம் எழுதியவர்
அ) நெல்லையப்பர்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) பாரதிதாசன்
Answer: (ஆ) பாரதியார்
In simple words: "பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான்" என்ற வரிகளை எழுதியவர் பாரதியார். இது சமூக சமத்துவத்தை வலியுறுத்துகிறது.

🎯 Exam Tip: பாரதியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும், அவரின் பெண் விடுதலைச் சிந்தனைகளையும் இந்த மேற்கோள் காட்டுகிறது.

 

Question 15. பாரதியார் பயன்படுத்திய முழக்கங்களில் ஒன்று எது?
அ) வாழ்க வாழ்க
ஆ) தொழில்கள் தொழில்கள்
இ) மனிதர்கள் மனிதர்கள்
ஈ) வெல்க வெல்க
Answer: (ஆ) தொழில்கள் தொழில்கள்
In simple words: பாரதியார் தன்னுடைய எழுத்துக்களில், தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் 'தொழில்கள் தொழில்கள்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.

🎯 Exam Tip: பாரதியார் போன்ற கவிஞர்களின் முக்கியமான முழக்கங்கள் மற்றும் வரிகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

Question 16. ஓருயிரின் இரண்டு தலைகள் என்பன
அ) ஆணும் பெண்ணும்
ஆ) அறிவும் அழகும்
இ) வாழ்வும் தாழ்வும்
ஈ) பிறப்பும் இறப்பும்
Answer: (அ) ஆணும் பெண்ணும்
In simple words: பாரதியார், ஆணும் பெண்ணும் ஒரு உயிரின் இரண்டு தலைகள் என்று கூறி, அவர்களின் சமத்துவத்தை வலியுறுத்தினார்.

🎯 Exam Tip: பாரதியாரின் பெண் விடுதலை மற்றும் சமூக சமத்துவக் கருத்துக்களைப் பற்றிய கேள்விகளில், இந்த வரிகள் முக்கியம்.

 

Question 17. தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் ______ லாம் பயிற்சிப் பெற்று வளர வேண்டும் என்கிறார் பாரதி.
அ) நவீன கலைகள்
ஆ) விளையாட்டு
இ) பாரம்பரிய கலைகள்
ஈ) அறிவியல் கல்வி
Answer: (அ) நவீன கலைகள்
In simple words: பாரதியார், தமிழ்ப் பள்ளிகளில் நவீன கலைகள் கற்பிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.

🎯 Exam Tip: கல்வி மற்றும் கலைகள் பற்றிய பாரதியாரின் சிந்தனைகளை நினைவுபடுத்துங்கள்.

 

Question 18. பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) முத்து சாமி தீட்சிதர், 1879
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி. விசுவநாதன், 2004
Answer: (அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
In simple words: கொடுக்கப்பட்ட இணைகளில், கவிகேசரி சாமி தீட்சிதர் மற்றும் 1879 என்பது சரியான தகவலாகும்.

🎯 Exam Tip: இது போன்ற கேள்விகளில் ஆசிரியரின் பெயர், நூல் வெளியீட்டு ஆண்டு போன்றவற்றை சரியாகப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

 

Question 19. வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது?
அ) சோழ மன்னர்களின் பரம்பரை வரலாறு
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
இ) ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவது
ஈ) பாரதியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது
Answer: (ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
In simple words: 'வம்சமணி தீபிகை' என்ற நூல் எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாற்றைப் பற்றிச் சொல்கிறது.

🎯 Exam Tip: வரலாற்று நூல்கள் எந்த வம்சத்தைப் பற்றியது அல்லது எந்த தலைப்பைப் பற்றியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

Question 20. வம்சமணி தீபிகை நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டு .6.8.1919இல் ஆட்சி செய்த வெங்கடேசர எட்டப்பருக்குக் கடிதம் எழுதியவர்
அ) பாரதியார்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசைமணி
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer: (அ) பாரதியார்
In simple words: 'வம்சமணி தீபிகை' நூலை மீண்டும் வெளியிட வேண்டும் என்று நினைத்து, பாரதியார் வெங்கடேசர எட்டப்பருக்கு 1919 ஆகஸ்ட் 6 அன்று கடிதம் எழுதினார்.

🎯 Exam Tip: பாரதியாரின் கடிதங்கள், அவர் யார் யாருக்கு எழுதினார், என்ன விஷயத்துக்காக எழுதினார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

 

Question 22. பாரதி தனது பதினைந்து வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் வேண்டப்படும் செய்தி
அ) ஆங்கில அரசை அகற்ற வேண்டி
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
இ) தன் நண்பன் கல்வி கற்க உதவி வேண்டி
ஈ) எட்டயப்புரத்தில் கவியரங்கம் நடத்த வசதி வேண்டி
Answer: (ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
In simple words: பாரதி தனது 15 வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் தனக்குக் கல்வி கற்க உதவி செய்யும்படி வேண்டினார். அவர் கல்வி பெற ஆர்வமாக இருந்தார்.

🎯 Exam Tip: பாரதியின் இளம் வயது கடிதங்கள் மற்றும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து கேள்விகள் பொதுவாக கேட்கப்படுகின்றன, எனவே இந்த விவரங்களை நினைவில் கொள்வது முக்கியம்.

 

Question 23. பாரதியாரின் கடலைக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?
அ) எட்டயபுரம் அரசருக்கு
ஆ) நெல்லையப்பருக்கு
இ) குத்திகேசவருக்கு
ஈ) சீனி. விசுவநாதனுக்கு
Answer: (இ) குத்திகேசவருக்கு
In simple words: பாரதியார் தனது கடல் பற்றிய கடிதத்தை குத்திகேசவருக்கு எழுதினார். இந்தக் கடிதம் அவரது ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தியது.

🎯 Exam Tip: எந்த கடிதத்தை யார் யாருக்கு எழுதினார்கள் போன்ற விவரங்கள் பாடத்தில் முக்கியம். இதில், 'கடலைக் கடிதம்' என்பது ஒரு குறிப்பிட்ட கடிதத்தின் பெயர்.

 

Question 24. சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரயாக
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சீனி. விசுவநாதன்
Answer: (அ) நெல்லையப்பர்
In simple words: சூரியோதயம் மற்றும் கர்மயோகி போன்ற பத்திரிக்கைகளில் நெல்லையப்பர் துணையாசிரியராக பணியாற்றினார். அவர் எழுத்துப்பணியில் ஈடுபட்டார்.

🎯 Exam Tip: பத்திரிக்கைகள் மற்றும் அவற்றில் பணியாற்றியவர்கள் குறித்த கேள்விகள் பொதுவாக இலக்கிய வரலாறு பிரிவில் கேட்கப்படுகின்றன. இதழியல் பணிகளில் உள்ள முக்கிய நபர்களை அடையாளம் காணவும்.

 

Question 25. பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியாராக இருந்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer: (அ) நெல்லையப்பர்
In simple words: பாரதி வெளியிட்ட பத்திரிகைகளில், நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார். அவர் பாரதியுடன் இணைந்து செயல்பட்டார்.

🎯 Exam Tip: பாரதியுடன் இணைந்து பணியாற்றியவர்களை நினைவில் வைத்துக்கொள்வது அவரது வாழ்க்கை மற்றும் இலக்கியப் பங்களிப்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.

 

Question 26. பாரதியின் பல்வேறு பாட்டுகளை (கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்டவை) பதிப்பித்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer: (அ) நெல்லையப்பர்
In simple words: பாரதியின் பல கவிதைகளை, அதாவது கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு போன்றவற்றை நெல்லையப்பர் தொகுத்து வெளியிட்டார். அவர் பாரதியின் படைப்புகளை பரப்ப உதவினார்.

🎯 Exam Tip: ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகளை தொகுத்து வெளியிட்ட பதிப்பாளர்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பை அறிவது முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும்.

 

Question 27. நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை
அ) சனி. விசுவநாதன
ஆ) நெல்லையப்பர்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer: (ஆ) நெல்லையப்பர்
In simple words: நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி போன்ற கவிதைகளை நெல்லையப்பர் எழுதினார். இவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்.

🎯 Exam Tip: ஒரு கவிஞரின் முக்கிய படைப்புகளின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது அவர்களின் இலக்கியப் பங்களிப்பை புரிந்துகொள்ள உதவும்.

 

Question 28. வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer: (ஈ) நெல்லையப்பர்
In simple words: வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை நெல்லையப்பர் எழுதினார். சுதந்திரப் போராட்ட வீரரான வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கையைப் பற்றி அவர் ஆவணப்படுத்தினார்.

🎯 Exam Tip: வரலாற்றுப் பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் பற்றிய தகவல்கள் பொது அறிவு மற்றும் இலக்கியக் கேள்விகளில் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

Question 29. லோகோபகரி, கே தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer: (ஈ) நெல்லையப்பர்
In simple words: லோகோபகரி மற்றும் கேசரி ஆகிய இதழ்களில் நெல்லையப்பர் துணையாசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவர் பல பத்திரிக்கைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

🎯 Exam Tip: ஒருவரின் பல்துறைப் பணிகளைப் பற்றிய கேள்விகள் பொதுவாக கேட்கப்படும். ஒரு நபர் வெவ்வேறு இதழ்களில் வகித்தப் பொறுப்புகளை நினைவில் கொள்ளுங்கள்.

TN Board Solutions Class 12 Tamil Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு

Students can now access the TN Board Solutions for Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு prepared by teachers on our website. These solutions cover all questions in exercise in your Class 12 Tamil textbook. Each answer is updated based on the current academic session as per the latest TN Board syllabus.

Detailed Explanations for Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு

Our expert teachers have provided step-by-step explanations for all the difficult questions in the Class 12 Tamil chapter. Along with the final answers, we have also explained the concept behind it to help you build stronger understanding of each topic. This will be really helpful for Class 12 students who want to understand both theoretical and practical questions. By studying these TN Board Questions and Answers your basic concepts will improve a lot.

Benefits of using Tamil Class 12 Solved Papers

Using our Tamil solutions regularly students will be able to improve their logical thinking and problem-solving speed. These Class 12 solutions are a guide for self-study and homework assistance. Along with the chapter-wise solutions, you should also refer to our Revision Notes and Sample Papers for Chapter 01.4 தம்பி நெல்லையப்பருக்கு to get a complete preparation experience.

FAQs

Where can I find the latest Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு for the 2026-27 session?

The complete and updated Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு is available for free on StudiesToday.com. These solutions for Class 12 Tamil are as per latest TN Board curriculum.

Are the Tamil TN Board solutions for Class 12 updated for the new 50% competency-based exam pattern?

Yes, our experts have revised the Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு as per 2026 exam pattern. All textbook exercises have been solved and have added explanation about how the Tamil concepts are applied in case-study and assertion-reasoning questions.

How do these Class 12 TN Board solutions help in scoring 90% plus marks?

Toppers recommend using TN Board language because TN Board marking schemes are strictly based on textbook definitions. Our Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு will help students to get full marks in the theory paper.

Do you offer Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு in multiple languages like Hindi and English?

Yes, we provide bilingual support for Class 12 Tamil. You can access Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு in both English and Hindi medium.

Is it possible to download the Tamil TN Board solutions for Class 12 as a PDF?

Yes, you can download the entire Samacheer Kalvi Class 12 Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு in printable PDF format for offline study on any device.